வருகைக்கு நன்றி! ஒவ்வொரு பாடலுக்கான விளக்கவுரை மற்றும் மொழிப்பெயர்ப்பை காண/மேம்படுத்த பாடலின் மேல் அழுத்தவும்.
வைகறைத் துயில் எழு
Vaigarai Thuyil Ezhu
அதிகாலையில் விழித்து எழுவது சிறப்புடையதாகும்.
Wake up before sunrise

கட்டுரை:

வைகறை என்பது விடியற்காலை 2 முதல் 6 மணி வரையுள்ள நேரம், சூரிய உதயத்துக்கு சற்று முன் வரை. நேரடியான சூரியக்கதிர் தாக்கமில்லாத இந்நேரத்தில்தான் நம் உடலுக்கு தேவையான சுத்தமான பிராணவாயு (ஓசோன்* படலம் மூலம்) கிடைக்கிறது.

(வைகறை) இந்நேரத்தில்தான் நம் உடலுருப்பான நுரையீரல் முழு ஆற்றலுடன் செயல்படுகிறது. நுரையீரலின் பிரதான வேலை (உள்வாங்கிய) பிராணவாயுவின் மூலம் இரத்தத்தை சுத்தம் செய்வது! ஆகவேதான், மூச்சுப்பயிற்ச்சி சார்ந்த – தியானம், யோகாசனம், உடற்ப்பயிற்ச்சி, வேகமான நடை, ஓடுதல் போன்றவை இப்பொழுதில் நல்லது.
ஆக, வைகறையில் துயில் எழுவது நமக்கு அன்று கிடைக்கும் முதல் வெற்றி! இத்தொடு,
1. முழு ஆற்றலோடும், சுத்தமான பிராணவாய்வோடும் இரத்தம் சுத்திகரிக்கபடுவதால் நோய்களிலிருந்து பாதுகாக்கபடுகிறோம்.
2. அன்று முழுவதும் சுறுசுறுப்பாகயிருக்க உதவும்
3. அதிக (பொன்னான) நேரம் கிடைக்கும்.
4. அவசரமில்லாமல் நிதானமாக இருக்க\ செயல்பட உதவும்
5. நல்ல சிந்தணைகளை தூண்டும்.

இரசணைக்கு, வைகறை மேகங்களின் அழுகு!

வைகறை இலக்கிய பாடல்:
வைகறை யாமம் துயிலெழுந்து தான்செய்யும்
நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து வாய்வதின்
தந்தையும் தாயும் தொழுதெழுக என்பதே
முந்தையார் கண்ட முறை
(ஆசாரக்கோவை# – 41)

*இது சுத்தமான பிராணவாயு கிடைக்க உதவும் படலம். இந்த படலத்தில் தான் இன்று ‘பூவி வேப்பமாகுதல்’ காரணமாக ஒரு துளை உண்டாகி அது பெரிதாகிக்கொண்டே போகிறது, இது பிராணவாயு சுத்திகரிப்புக்கு பெரிய இடையூர்.

#மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத் தமிழ் நூல்களின் தொகுப்புக்களில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றாக வைத்து எண்ணப்படும் இது ஒரு நீதி நூல். வண்கயத்தூரைச் சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதினார்.

உதவி
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88