வருகைக்கு நன்றி! ஒவ்வொரு பாடலுக்கான விளக்கவுரை மற்றும் மொழிப்பெயர்ப்பை காண/மேம்படுத்த பாடலின் மேல் அழுத்தவும்.
ஒளவியம் பேசேல்
Ouviyyam Paesael
பொறாமை வார்த்தைகளை பேசாதே.
Never speak with jealousy and envy

மற்றவரிடத்தில் உள்ள உயர்ந்த குணம் (கல்வி, செல்வம்..) கண்டு ஒருவன் பொறாமை கொண்டு பொறாமை பேசுதல் தனது வளர்ச்சிக்கு தடை மட்டுமல்லாது மிகுந்த தீமையையும் விளைவிக்கும்.

அரசு அரியணையில் இருந்த பாண்டவர்கள் மேல் பொறாமை கொண்டு அவர்களை வஞ்சகமாக அழைத்து மாயச்சூதாடி நாடு நகரம் முதலியவற்றை கவர்ந்தான் துரியோதனன். ஆனால் (பொறாமையால்) அறமற்று கவர்ந்தவை எவையும் நிரந்தரமில்லை. துரியோதனன் பாண்டவர்களுடனான மகாபாரத யுத்தத்தில் தோல்வியுற்று அனைத்தையும் அவர்களிடமே இழந்தான்.